Sunday, June 20, 2010

ஏன் அழுகிறாய்

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
யோவான் – 20:15
அன்று கல்லறையின் அருகில் நின்ற மரியாளை நோக்கி ஏன் அழுகிறாய் என்று கேட்ட இயேசு இன்று வேதனை நிமித்தம் அழுது புலம்பி கொண்டிருக்கிற உன்னையும் என்னையும் பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று. ஐயோ என் வேதனை நீக்க வருவேன் என வாக்கு கொடுத்த வாக்கு மாறாத நேசரை காணவில்லையே என அவரை தேடி தோட்டத்தில் நின்று கதறி கொண்டிருக்கும் அருமை சகோதரனே சகோதரியே இதோ தோட்டகாரனாகிய இயேசு உன் அருகில் நின்று உன்னை நோக்கி கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
அன்று வனாந்திரத்தில் இறச்சிக்காக அழுத ஜனங்களுக்கு சாப்பிடும் மட்டும் இறச்சி கொடுத்த தேவன் இன்று அழுது கொண்டிருக்கும் உன்னை பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
ஐயோ இருதய பாரத்தின் நிமித்தமாக நான் அழுது கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் சமாதானம் இல்லை, கணவன் அல்லது மகன் குடித்து வெறித்து வீட்டில் கலகம் ஏற்படுவதினால் இருதயபாரத்தோடு காணப்படலாம் அல்லது கடன் தொல்லை காரணமாக, வேலை இல்லாமையினால், குழந்தை இல்லாமையினால் ஒருவேளை இருதய பாரத்தோடு காணப்படலாம், எத்தகைய பாரத்தோடு நீ இருந்தாலும் இதோ தோட்டகாரனாகிய இயேசு உன்னுடைய பாரத்தை ஏற்றி செல்வதற்காக கல்வாரி வண்டியோடு உன் அருகில் வந்து உன்னோடு கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று இருதய பாரத்தை உள்ளில் வைத்துகொண்டு அவரை நோக்கும் சகோதரனே சகோதரியே அந்த பாரத்தை அந்த கல்வாரி வண்டியில் இறக்கி வைப்பாயா.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். (மத்தேயு – 11:28)

No comments:

Post a Comment