Saturday, February 27, 2010

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் - 8:1
ஆம் அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் மாதிரம்மல்ல யாத்திராகமம் 15:26 ல் கூறப்பட்டது போல எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வர அனுமதிக்க மாட்டார்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15:26
அவர் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும் சகோதரனே சாகோதரியே கர்த்தர் கூறுகிறார் நானே உன் பரிகாரியாகிய கர்த்தர், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். பாருங்கள் என்ன அருமையான வாக்குத்தத்தம்.
பொதுவாக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். இந்த மருத்துவரிடம் போய் நாம் மருந்து வாக்கினால் ஒவ்வொரு மருந்துக்கும் கேடுள்ள பின் விளைவுகள் உண்டு, ஆனால் எல்லா வியாதிக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி, நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்ன நம் இயேசுவே. இந்த இயேசுவிடம் நாம் போனால், அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால் நமக்கு கேடுள்ள எந்த பின் விளைவும் இல்லை மாறாக பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மையாக வைப்பார். நித்திய ஜீவனையும் அளிப்பார்.
நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது எதை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்து, அவர் கட்டளைகளை கைகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். நம்மை மேன்மையாக வைப்பார் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Wednesday, February 24, 2010

அவர் பாதத்தில் விழுவோமா

அவர் பாதத்தில் விழுவோமா
அப்போஸ்தலருடைய நடபடிகள் - 14:15 ம் வசனத்தை பார்க்கும்போது
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
இன்றைக்கு நாமும் இப்படித்தான் கானபடுகின்றோம் படைத்தவரை மறந்து படைப்பை நோக்கி மான்றாடிக்கொன்டிருக்கிறோம். மாத்திரமல்ல உருவாகினவரை விட்டுவிட்டு உபயோக படுத்திய கருவியை நோக்கி ஓடிகொண்டிருக்கிறோம்.
யாக்கோபு – 5:17 ல்
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம்- 72:12 ல்
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
இதை மறந்து விடுகின்றோம். பதிலாக யார் மூலமாக விடுதலை கிடைத்ததோ அவருக்கு பின்னால ஓடிக்கொன்டிருக்கிறோம்
அவர் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார் என்பதை மறந்து போகாதே
சங்கீதம்- 50:15 ல்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்
ஆம் சகோதரனே சாகோதரியே கர்த்தரை நோக்கி கூப்பிடு அவர் உன்னை விடுவிப்பார். நீ யாருக்கு பின்னாலும் ஓட வேன்டிய அவசியம் இல்லை காரணம் அவர்களும் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷர்கள் தான்.
அன்னாள் தேவ சமுகத்தில் தன் கண்ணீரை ஊற்றினாள், கர்த்தர் அவள் நிந்தையை மாற்றினார் என பார்க்கிறோம்.
நாமும் நம்முடைய தேவைக்காக நம்முடைய முழங்கால்களை மடக்கினால் நம்முடைய தேவைகளை அவர் நிவிர்த்தி செய்வார். நமக்காக நம்முடைய தேவைக்காக கண்ணீரோடு ஜெபிக்க ஒரு கூட்ட ஜனத்தை அவர் ஆயதபடுதுவார்
ரோமர் – 11:4 ல் பவுல் கூறுகிறார்
அவனுக்கு (எலியாவுக்கு) உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
எனக்கு யாரும் இல்லையே என கதறிய எலியாவிற்க்கு தேவன் கொடுத்த உத்தரவு போல இன்றும் தேவன் நமக்கு உத்தரவு கொடுக்கிறார்
சங்கீதம்- 107:6 ல்
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
அவர் என்னை விடுவித்தார் என்ற விசுவாசத்தோடு அவர் பாதத்தில் விழுவோமா
கர்த்தர் நம் அனைவரயும் ஆசிர்வதிபாரக ஆமன்

Tuesday, February 23, 2010

யாருக்கு வெட்கம்

சங்கீதம்-22:5 ல் சங்கீதக்காரன் கூறுகிறான்
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.
ஆம் கர்த்தரை நம்பினவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். இன்னும் சங்கீதம்-34:5 ல் பார்கிறோம்
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
ஆம் அன்பானவர்களே கர்த்தரை நம்பினவர்களும், அவரை நோக்கிப்பார்த்தவர்களும் வெட்கப்படவில்லை
அப்படியானால் யாருக்கு வெட்கம்
முதலாவதாக கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களுக்கு வெட்கம்
தானியேல் -9:8 ல்
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
ஆம் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் அவர்களும் அவர்கள் ராஜாக்களும் அவர்கள் பிரபுக்களும் வெட்கத்துக்குரியவர்களானார்கள் என பார்கிறோம்
இரண்டாவதாக கர்த்தரை விசுவாசியாதவர்களுக்கு வெட்கம்
1 பேதுரு -2:6 ல்
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ஆம் கர்த்தர் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என பார்கிறோம்
மூன்றாவதாக கர்த்தரை பகைக்கிற அனைவருக்கும் வெட்கம்
சங்கீதம்-129:5 ல்
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
ஆம் கர்த்தரை பகைக்கிற அனைவருமே வெட்கப்படுவது மட்டுமல்ல பின்னிட்டுத் திரும்புவார்கள் என பார்க்கிறோம்.
1 யோவான் -2:28 ல்
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களா யிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
ஆம் அவர் வரும் போது அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் இருக்க அவரில் நிலைத்திருக்கவேண்டும்
கர்த்தருக்கு வேரோதமாக பாவம் செய்யாமல் அவரில் நிலைத்திருந்து அவரை பகைக்காமல் அவரை விசுவாசிக்கிற சகோதரனே சாகோதரியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
யோவேல் – 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்;என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்