Monday, April 19, 2010

யார் அந்த சத்துரு?

மத்தேயு 5:44 லை படிக்கும் போது
44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
ஆம் அன்பானவர்களே நம் ஆண்டவர் சொல்லுகிறார் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
லூக்கா 6:17,25 தாம் வசனங்களிலும் இதை காணலாம்.
ஒரு வேளை நாம் கேட்கலாம் எனக்கு சத்துரு யார்? இன்னும் ஒரு வேளை நாம் நினைக்கலாம் எனக்கு சத்துரு பிசாசானவன் என்று, என் ஆண்டவர் கூறுகிறார் சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று. ஆண்டவர் ஒருபோதும் பிசாசை சிநேகியுங்கள் என்று சொல்வதில்லை அப்படியானால் நமக்கு சத்துரு யார்?
மத்தேயு 10:36 ல் அருள்நாதர் கூறுகிறார்
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
காரணம் என்ன? நம்மிடம், நம் இருதயத்தில் மன்னிக்கும் மனப்பான்மை இல்லை. நம்மிடம் கோபத்தின் ஆவி உள்ளதால் நம் சகோதரர்கள் செய்யும் சிறிய தவறை கூட பொறுக்கமுடியாமல் நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
யாக்கோபு 1:20 ல் பார்க்கும்போது
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ஆம் நம்முடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது. மாறாக நம்முடைய கோபத்தின் நிமித்தமாக பகை நெஞ்சில் குடிகொள்கிறது, மன்னிக்கும் மனப்பான்மை அற்றவர்களாய், நம் சகோதரர் மீதுள்ள பொறாமையினால், பொறுமை இழந்து நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
நீதிமொழிகள் – 27:4 ல் பார்க்கும்போது
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
ஆம் கோபத்தின் உக்கிரத்தால், மன்னிக்கும் மனப்பான்மை அற்ற நாமே நமக்கு சத்துரு என்பதை மறந்து போகாதே
லூக்கா - 17:3 ல் அருள்நாதர் கூறுகிறார்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
தன்னை கொலை செய்த தன் ஜனத்தை மன்னிக்க, பிதாவினிடத்தில் வேண்டிய அருள்நாதர் இயேசுவின் பின் செல்கின்ற நாம் நம் சகோதரர் செயும் சிறிய தவறை மன்னிப்போமா
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

No comments:

Post a Comment