Tuesday, April 27, 2010

மனவிருப்பம்

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
சங்கீதம் – 20:4
என்ன அருமையான வாக்குத்தத்தம், கர்த்தர் நம்முடைய மன விருப்பத்தின் படி நமக்கு தந்தருள வல்லவராக இருக்கிறார். நம்முடைய மனவிருப்பம் என்ன? நமது ஆலோசனைகளையெல்லாம் எப்படி காணப்படுகிறது?
நம்முடைய மன விருப்பம் கர்த்தருக்கு ஏற்றதாக காணப்படுகிறதா?
உபாகமம் 30:15 ல் மோசே இரண்டு காரியத்தை இஸ்ரவேல் ஜனத்துக்கு முன்பாக வைப்பதை பார்க்கலாம்
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
இன்றைக்கும் இந்த இரண்டு காரியங்களும் தேவன் நம் முன்பாக வைத்து இருக்கிறார், நம்முடைய மன விருப்பம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நம்முடைய மனவிருப்பம் ஜீவனை நோக்கியா அல்லது மரணத்தை நோக்கியா, நம்மை நாமே சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.
நீதிமொழிகள் 16 ம் அதிகாரம் 25 ம் வசனத்தை படிக்கும் போது இவ்விதமாக கூறப்பட்டுள்ளது
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
மத்தேயு 26:50 ல் அருள்நாதர் யூதாசை பார்த்து இப்படி கூறுகிறார்
இயேசு அவனை (யூதாசை) நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்.
இன்று நம்மை பார்த்து கேட்கிறார் சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய், உன்னுடைய மன விருப்பம் என்ன என்று. நாம் என்ன பதில் சொல்லுகிறோம் யூதாசை போல நானும் உம்மை சிலுவையிலறைய, காட்டிகொடுக்க வந்தேன் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா, அல்லது அப்பா என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன் ஜீவ வழியை எனக்கு காண்பியும் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா. உன்னுடைய மனவிருப்பம் எதுவானாலும் நியாயத்தீர்ப்பு என்பது ஒன்று உண்டு என்பதை மறந்து போகாதே. இதோ எசேக்கியேல் தீர்கத்தரிசி மூலமாக கர்த்தர் எச்சரிக்கிறார் நம் ஒவ்வொருவரையும் அவனவன் வழிகளின்படியே, அவனவன் மனவிருப்பத்தின் படியே நியாயந்தீர்ப்பேனென்று.
எசேக்கியேல் 33:20 ல் ம் வசனத்தை படிக்கும் போது
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். நீதிமொழிகள் :15:9
கர்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

No comments:

Post a Comment