Tuesday, May 18, 2010

தேவ அன்பு

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் – 2:5
பாருங்கள் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் அவருடைய (கிறிஸ்துவினுடைய) வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும் என்று. கிறிஸ்துவின் அன்பு எப்படிபட்டது என்று அவரே கூறுகிறார் 3 ம் அதிகாரம் 16 முதல் 18 வரை படிக்கும் போது
16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இந்த நாட்களில் நம்முடைய அன்பு எப்படி காணப்படுகிறது தேவ அன்பு நம்மிடம் காணப்படுகிறதா, நாம் நம்மை தாமே சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்………….. ஒருவேளை நாம் நம்முடைய சகோதரனுக்காக ஜீவனை கொடுக்காவிட்டாலும் நம் சகோதரனின் கஸ்டத்திலாவது உதவி செய்கிறவர்களாக கானப்படுகிறோமா.
ரோமர் 13;8 ல் பார்க்கும்போது
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் என பார்க்கிறோம்
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. என ரோமர் 13:10 ல் பார்கிறோம்.
பிறருக்கு கெடுதல் செய்யாத இந்த அன்பு நம்மில் காணப்படுகிறதா?
ஆதியிலே தேவன் வழங்கிய பத்து கட்டளைகளில் பிராதன கட்டளை எது என பார்ப்போமானால்
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
இதை மத்தேயு – 22:39 மற்றும் மாற்கு – 12:31 ம் வசனங்களில் காணலாம்.
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா கூறுகிறார் கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெற தேவனுடைய அன்பிலே நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று.
யூதா 1:21 ஐ படிக்கும் போது
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
தேவனுடைய அன்பிலே நித்திய ஜீவனுக்கேதுவாக காத்திருப்போமா
நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

No comments:

Post a Comment