Monday, May 10, 2010

யார் நீ?

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபம் 1 ம் அதிகாரம் 15 ம் வசனத்தை பார்க்கும்போது
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்
என படிக்கிறோம், கிறிஸ்துவுக்காக எல்லாம் குப்பை என்று எண்ணி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான்னையே அர்பணித்த பவுல் கூறுகிறார் தான்னை பாவிகளிலும் பிரதான பாவி என்று
லூக்கா 5 தாம் அதிகாரம் 8 டாம் வசனத்தில் பேதுரு கூறுகிறார் நான் பாவியான மனுஷன் என்று
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
லூக்கா – 18 டாம் அதிகாரத்தில் இயேசு இரண்டு பேரை பற்றி கூறுகிறார் 10 தாம் வசனம் முதல் 14 ம் வசனம் வரை படிக்கும்போது
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இன்றைக்கு நாம் எந்த நிலமையில் காணப்படுகின்றோம். அந்த பரிசேயனை போல நான் பரிசுத்தவான் என்று நம்மை நாமே பெருமை பாராட்டி கொண்டு இருக்கின்றோமா. அல்லது பவுலை போல, பேதுருவை போல , இந்த ஆயக்கரனை போல நம்மை பாவி என்று அற்பணிக்கிண்றோமா? அருள்நாதர் கூறுகின்றார் பெருமை பாரடினவன் அல்ல பாவியே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று
ரோமர் 3:23 ல் பவுல் கூறுகிறார்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி.
ஆம் நீதிமான் யாரும் இல்லை எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களாகி விட்டோம்
சங்கீதம் 51:5 ல் பார்க்கும்போது
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்றும்
நீதிமொழிகள் - 20:9 ல்
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
என்றும் படிக்கிறோம்
இன்றைக்கு நாம் யார்? எந்த நிலமையில் காணப்படுகின்றோம் ஆயக்கரனை போல நான் பாவி என்று அவர் சமுகத்தில் ஒப்புகொள்ளுவோமா?
லூக்கா 5:32 ல்
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்த இயேசுவின் கையில் அப்பா நான் பாவிகளிலும் பிரதான பாவி என்று நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.
ஆமென்

No comments:

Post a Comment