Saturday, February 27, 2010

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் - 8:1
ஆம் அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் மாதிரம்மல்ல யாத்திராகமம் 15:26 ல் கூறப்பட்டது போல எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வர அனுமதிக்க மாட்டார்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15:26
அவர் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும் சகோதரனே சாகோதரியே கர்த்தர் கூறுகிறார் நானே உன் பரிகாரியாகிய கர்த்தர், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். பாருங்கள் என்ன அருமையான வாக்குத்தத்தம்.
பொதுவாக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். இந்த மருத்துவரிடம் போய் நாம் மருந்து வாக்கினால் ஒவ்வொரு மருந்துக்கும் கேடுள்ள பின் விளைவுகள் உண்டு, ஆனால் எல்லா வியாதிக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி, நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்ன நம் இயேசுவே. இந்த இயேசுவிடம் நாம் போனால், அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால் நமக்கு கேடுள்ள எந்த பின் விளைவும் இல்லை மாறாக பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மையாக வைப்பார். நித்திய ஜீவனையும் அளிப்பார்.
நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது எதை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்து, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்து, அவர் கட்டளைகளை கைகொள்ளும்போது, அவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். நம்மை மேன்மையாக வைப்பார் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

No comments:

Post a Comment