Wednesday, February 24, 2010

அவர் பாதத்தில் விழுவோமா

அவர் பாதத்தில் விழுவோமா
அப்போஸ்தலருடைய நடபடிகள் - 14:15 ம் வசனத்தை பார்க்கும்போது
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
இன்றைக்கு நாமும் இப்படித்தான் கானபடுகின்றோம் படைத்தவரை மறந்து படைப்பை நோக்கி மான்றாடிக்கொன்டிருக்கிறோம். மாத்திரமல்ல உருவாகினவரை விட்டுவிட்டு உபயோக படுத்திய கருவியை நோக்கி ஓடிகொண்டிருக்கிறோம்.
யாக்கோபு – 5:17 ல்
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம்- 72:12 ல்
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
இதை மறந்து விடுகின்றோம். பதிலாக யார் மூலமாக விடுதலை கிடைத்ததோ அவருக்கு பின்னால ஓடிக்கொன்டிருக்கிறோம்
அவர் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார் என்பதை மறந்து போகாதே
சங்கீதம்- 50:15 ல்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்
ஆம் சகோதரனே சாகோதரியே கர்த்தரை நோக்கி கூப்பிடு அவர் உன்னை விடுவிப்பார். நீ யாருக்கு பின்னாலும் ஓட வேன்டிய அவசியம் இல்லை காரணம் அவர்களும் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷர்கள் தான்.
அன்னாள் தேவ சமுகத்தில் தன் கண்ணீரை ஊற்றினாள், கர்த்தர் அவள் நிந்தையை மாற்றினார் என பார்க்கிறோம்.
நாமும் நம்முடைய தேவைக்காக நம்முடைய முழங்கால்களை மடக்கினால் நம்முடைய தேவைகளை அவர் நிவிர்த்தி செய்வார். நமக்காக நம்முடைய தேவைக்காக கண்ணீரோடு ஜெபிக்க ஒரு கூட்ட ஜனத்தை அவர் ஆயதபடுதுவார்
ரோமர் – 11:4 ல் பவுல் கூறுகிறார்
அவனுக்கு (எலியாவுக்கு) உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
எனக்கு யாரும் இல்லையே என கதறிய எலியாவிற்க்கு தேவன் கொடுத்த உத்தரவு போல இன்றும் தேவன் நமக்கு உத்தரவு கொடுக்கிறார்
சங்கீதம்- 107:6 ல்
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
அவர் என்னை விடுவித்தார் என்ற விசுவாசத்தோடு அவர் பாதத்தில் விழுவோமா
கர்த்தர் நம் அனைவரயும் ஆசிர்வதிபாரக ஆமன்

No comments:

Post a Comment