Tuesday, February 23, 2010

யாருக்கு வெட்கம்

சங்கீதம்-22:5 ல் சங்கீதக்காரன் கூறுகிறான்
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.
ஆம் கர்த்தரை நம்பினவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். இன்னும் சங்கீதம்-34:5 ல் பார்கிறோம்
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
ஆம் அன்பானவர்களே கர்த்தரை நம்பினவர்களும், அவரை நோக்கிப்பார்த்தவர்களும் வெட்கப்படவில்லை
அப்படியானால் யாருக்கு வெட்கம்
முதலாவதாக கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்களுக்கு வெட்கம்
தானியேல் -9:8 ல்
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
ஆம் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் அவர்களும் அவர்கள் ராஜாக்களும் அவர்கள் பிரபுக்களும் வெட்கத்துக்குரியவர்களானார்கள் என பார்கிறோம்
இரண்டாவதாக கர்த்தரை விசுவாசியாதவர்களுக்கு வெட்கம்
1 பேதுரு -2:6 ல்
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ஆம் கர்த்தர் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என பார்கிறோம்
மூன்றாவதாக கர்த்தரை பகைக்கிற அனைவருக்கும் வெட்கம்
சங்கீதம்-129:5 ல்
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
ஆம் கர்த்தரை பகைக்கிற அனைவருமே வெட்கப்படுவது மட்டுமல்ல பின்னிட்டுத் திரும்புவார்கள் என பார்க்கிறோம்.
1 யோவான் -2:28 ல்
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களா யிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
ஆம் அவர் வரும் போது அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் இருக்க அவரில் நிலைத்திருக்கவேண்டும்
கர்த்தருக்கு வேரோதமாக பாவம் செய்யாமல் அவரில் நிலைத்திருந்து அவரை பகைக்காமல் அவரை விசுவாசிக்கிற சகோதரனே சாகோதரியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
யோவேல் – 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்;என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

No comments:

Post a Comment