Wednesday, March 10, 2010

அனைத்தும் நன்மைக்கே

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில், வேலையிடத்தில், குடும்பத்தில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, எனிக்கு ஏன் இந்த துன்பம் என கேட்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உண்மை கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
இதை யோசேப்பின் வாழ்க்கையில் பார்க்க முடியும் ஆதியாகமம் 45:5 ஐ படிக்கும்போது
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்'
என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவனை தேவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாற்றினார், ஆம் தீமைஅனைத்தையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன்.
இன்னும் யோனாவின் வாழ்க்கையை பார்க்கும்போது யோனா 1:15 ஐ படிக்கும்போது
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்;
என பார்கிறோம் ஒருவேளை யோனா நினைத்திருக்கலாம் நான் இதோடு மரித்தது போவேன் என்று. பாருங்கள் தேவன் யோனாவை விடுவித்தது மட்டும் அல்ல யோனா முலமாக நினிவேக்கு ஒரு பெரிய இரட்ச்சிப்பை கட்டளையிட்டார்

அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நமக்கு
கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
எரேமியா - 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

ஆமென்

No comments:

Post a Comment