Thursday, March 25, 2010

தேவ சித்தம்

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5: 16-18.
ஆம் அன்பானவர்களே நம்மை குறித்து நம் தேவனுடைய சித்தம் எப்பொழுதும் ஸ்தோத்திரஞ்செய்ய வேண்டும் என்பதே
இந்த வருட, முதல் மாதத்தின் கடைசி நாட்களில் நாம் வந்து இருக்கிறோம். இந்த மாதம் முழுவதும் தேவன் நம்மை நடத்தி வந்த பாதைகள் எத்தனை அருமையானவைகள்! நம்மை ஜீவனோடு காத்து, சுகபெலத்தை கொடுத்து ஒவ்வொரு நாளும் தமது கிருபையால் நம்மை வழிநடத்தினாரே! நமது போக்கையும் வரத்தையும் அருமையாய் காத்து வேலையிடத்தில் ஞானத்தை கொடுத்து வழிநடத்தினாரே
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். என்ற வசனத்தின்படி நம்மை உறங்காது இந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்தாரே!
இப்படி தேவன் அதிசயமாய் நடத்தி வந்த வழிகளை நினைத்து, நாம் அவரை ஸ்தோத்திரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கர்த்தர் நமக்கு செய்த எல்லா உபகாரங்களுக்கும் ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? சங்கீதம் 116:13-14 ல் சங்கீதக்காரன் கூறியது போல 'கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்' என்று நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அப்பா நீர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் என்று நம்முடைய ஸ்தோத்திர பலியை செலுத்துவோமா
எபிரெயர் 13:14,15 ல் அப்போஸ்தலனாகிய பவுல் பவுல் கூறியது போல
14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் .
15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
ஆம் அன்பானவர்களே இப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அவருடைய நாமத்தைத் துதிக்கும், உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை செலுத்தும் சீயோன் குமாரத்தியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் சகரியா – 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

1 comment: