Monday, March 29, 2010

மேய்ப்பன்

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
சங்கீதம்-78:71
ஆடுகளின் பின்னாகத் திரிந்த தாவீதை தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலை மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார் என பார்கிறோம்
இந்த மேய்ப்பன் சங்கீதம் 23 ம் அதிகாரத்தில் கூறுகிறான்
1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
ஆம் கர்த்தர் அவனுடைய மேய்ப்பனாக இருந்தபடியால் அவன் தாழ்ச்சியடையவில்லை என பார்க்கிறோம். ஆம் இந்த நாட்களிலே கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் நாமும் இதே போல சொல்ல முடியும். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்என்று.
கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் அவர் நம்மை எப்படி மேய்ப்பர் என்பதை இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறுகிறான்
பாருங்கள் அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம் ஆத்துமாவைத் தேற்றி நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
அவர் நம்மோடு கூட இருக்கிறார். நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறார், நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மை பாதுகாக்கிறார். கர்த்தர் நம் மேய்ப்பனாக இருந்தால் இவிதமாக பல ஆசிர்வதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதே சமயத்தில் மேய்ப்பன் என்று சொல்லுகின்ற சில ஓநாய்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாய் இருக்க திருமறையில் கூறப்பட்டுள்ள சில மேய்ப்பர்களை நாம் இங்கே பார்க்கலாம்
முதலாவது ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
பகுத்தறிவில்லாத மேய்ப்பர்
இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவை நோக்கிக்கொண்டிருக்கிற திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்என்று
ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

ஆம் இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மிருககுணமுள்ள மேய்ப்பர்
இங்கே நாம் பார்க்கும்போது கர்த்தரைத் தேடாத மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரிசி கூறுகிறான் மிருககுணமுள்ள மேய்ப்பர்கள்என்று.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
கர்த்தரை தேடாத மேய்ப்பனிடத்தில் போனால் நாமும் சிதறடிக்கப்படுவோம் என்பதை மறந்து போகாதே.
லூக்கா- 11 ம் அதிகாரம் 23 ம் வசனத்தை படிக்கும்போது அருள்நாதர் இவ்விதமாக கூறுகிறார்
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
எனவே இப்படிப்பட்ட மிருககுணமுள்ள மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது
தங்களையே மேய்க்கிற மேய்ப்பர்
இந்த மேய்ப்பர் எப்படி இருக்கிறார்கள் என பார்த்தால் இவர்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறார்கள்; கொழுத்ததை அடிக்கிறார்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறார்கள்.
பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆளுகிறார்கள்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 3, 4 ம் வசனங்களில் இதை தெளிவாக பார்க்கலாம்
5 ம் வசனத்தை பார்க்கும்போது
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
இப்படிப்பட்ட மேய்ப்பர்களுடைய மந்தைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின என பார்க்கிறோம்.
நாமும் காட்டு மிருகத்திற்க்கு இரை ஆகாதபடி இப்படிபட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
இப்படிபட்ட மேய்ப்பரை பார்த்து கர்தர் கூறுகிறார் எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனம்
தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ!
சகரியா - 11 ம் அதிகாரம் 17 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மந்தையைக் கைவிடுகிற மேய்ப்பன்
இப்படிப்பட்ட மேய்ப்பர்களை கர்தர் வெறுக்கிறார் இவர்களை பற்றி தேவன் சகரியா தீர்கதரிசி முலமாக கூறுகிறார்
சகரியா - 11 : 17 ல்
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
இப்படி பட்ட மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரசி மூலமாக தேவன் எச்சரிக்கிறார் எரேமியா - 23 ம் அதிகாரம் 1,2ம் வசனத்தை படிக்கும்போது
1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் அன்பானவர்களே இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
அப்படியானால் நம்முடைய மேய்ப்பன் யார்?
நம்முடைய மேய்ப்பன் பகுத்தறிவுள்ள, மிருககுணமற்ற, மந்தையை கைவிடாத, தன்னையே மேய்க்காத, நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கிற மேய்பனாக இருக்க வேண்டும்
யோவான் 10:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
ஆம் அன்பானவர்களே கடைசி காலத்தில் வந்து இருகின்ற நாம் யாருக்கு பின்நாலேயும் ஓடாமல் ஆடுகளுடைய பெரிய மேய்ப்பராம், பிரதான மேய்ப்பர் இயேசுவிற்கு நம்மை ஒப்புகொடுப்போமா
நமக்காக தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய நல்ல மேய்ப்பனாம் நம் இயேசு கடைசி வரைக்கும் நம்முடைய ஜீவனை அழிவிலின்றும் அந்தகாரத்திலின்றும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
எந்த பாவியேயும் தள்ளாத நேசர் இதோ நம்மையும் அழைக்கிறார்
நம்முடைய முழங்கால்களை அவருக்கு முன்பாக முடக்குவோமா, அப்பா என்னையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்போமா
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

No comments:

Post a Comment